கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழ்நாடு சி. பி. சி. ஐ. டி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, நேற்று சி. பி. சி. ஐ. டி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் 200 - க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் அழைக்கப்பட்டு உள்ளார்.
ஜெயலலிதாவுடன், சசிகலாவோ அல்லது தலைமைச் செயலாளரோ இல்லாத நேரங்களிலும், அவருடன் நிழல் போல் இருந்த பாதுகாப்பு உதவியாளர்களில் பெருமாள் சாமியும் ஒருவர்.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கடந்த செவ்வாய்க்கிழமை சி. பி. சி. ஐ. டி அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அதேபோல், நேற்று மற்றொரு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அவரிடம் சி. பி. சி. ஐ. டி அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் மாதவன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.