கோவை வனக்கோட்டம், மதுக்கரை அருகே தாயை பிரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மாதமே ஆன ஆண் காட்டு யானை குட்டி, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பாதுகாப்பாக நேற்று மாற்றப்பட்டுள்ளது.
வனத்துறையினர் ரோந்து பணியின்போது கண்டறிந்த இந்த குட்டிக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது. தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. குட்டியின் இளம் வயது மற்றும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு, உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, உரிய பராமரிப்புக்காக முதுமலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் குட்டி யானைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.