கோவை: பிணமாக கிடந்த வாட்ச்மேன்; பரபரப்பு

84பார்த்தது
கோவை: பிணமாக கிடந்த வாட்ச்மேன்; பரபரப்பு
கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (68). இவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் எப்பொழுதும் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் முழுவதும் காத்திருந்த அவருடைய மனைவி பாக்கியவதி, கணவர் வேலை செய்யும் இடத்தை தொடர்பு கொண்டுள்ளார். அங்கிருந்தவர்கள் நடராஜன் சாப்பாட்டு பை மற்றும் உடைகள் அங்கு இருப்பதாகவும் ஆனால் அவர் பணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடராஜ் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி