தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில்
தபால் ஊழியர்கள் கேக் வெட்டி கோலமிட்டு கொண்டாடினர்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.
இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்தாண்டு "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு கோவையில் உள்ள வெவ்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.