கோவை: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை

50பார்த்தது
கோவை: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை
கோவை அருகே உள்ள கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த துரைசாமி (63) என்பவர், தனது மகன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கூலித் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ரஞ்சித் முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

மகன் தற்கொலை செய்த அதே நாளில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துரைசாமியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், துரைசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து, துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி