கோவை: விழிப்புணர்வு நடை பயணம் மற்றும் பாதுகாப்பு ஒத்திகை

54பார்த்தது
கோவையில் ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைப்பது, ரயில்கள் மீது கல் வீசுவது போன்ற சமூக விரோத செயல்களைத் தடுக்கும் விதமாக, ரயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார் நேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். கோவை ரயில் நிலையத்திலிருந்து பீளமேடு வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில் 30க்கும் மேற்பட்ட RPF போலீசார் கலந்து கொண்டு, ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தண்டனைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும், ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வும் நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும்போது எவ்வாறு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவது என்பது குறித்து RPF போலீசார் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகை, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி