கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் பூ மார்க்கெட் பகுதியில் நேற்று (மார்ச் 12) இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.