பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல்

56பார்த்தது
மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக சாலை மறியல் - மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம். தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ. மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்கள் கைது.

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி. எஸ். என். எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஎம். தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ. மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி