பெரியநாயக்கன்பாளையம்: லாரி மோதி காவலாளி பலி

77பார்த்தது
பெரியநாயக்கன்பாளையம்: லாரி மோதி காவலாளி பலி
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னமத்தம்பாளையத்தைச் சேர்ந்த காளிச்சாமி (வயது 42), மில் காவலாளி. நேற்று மதியம் 2 மணி அளவில் தனது மகள் கீர்த்திகாவை (11) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த காளிச்சாமி சிகிச்சைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கீர்த்திகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி