சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுவளவு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஸ்ரீதரன் (20). இவர் கோவை பீளமேட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற ஸ்ரீதரன் மாலையில் பைக்கில் தான் தங்கி இருக்கும் அறைக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் அவிநாசி ரோட்டில் 97 வது பில்லர் அருகே சென்ற போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவை நோக்கி வந்த வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஸ்ரீதரன் ஒட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிங்காநல்லூரில் உள்ள இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் சேலம் எடப்பாடி ரெட்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார்(44) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.