கோவை: காட்டு யானை குட்டி தனிமை- வனத்துறையினர் தவிப்பு!

64பார்த்தது
மேற்கு தொடர்ச்சி மலையில் தாயை இழந்த காட்டு யானை குட்டி தனிமையில் தவித்து வருவதால், வனத்துறையினர் அதை வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதிகளில் ஏராளமான யானைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. அதன் குட்டி தனியாக தவித்து வருகிறது.
வனத்துறையினர் குட்டியை மீட்டு வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இன்றும் மற்ற யானைகள் குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வனத்துறையினர் குட்டியின் நலன் கருதி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி