கோவை: விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; துணை கமிஷனர்

52பார்த்தது
கோவை: விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்; துணை கமிஷனர்
கோவை நகரில் இரவு நேரத்தில் ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் இன்று எச்சரித்துள்ளார். இரவு 11 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து குறைந்ததும், பல இடங்களில் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் விதி மீறல்கள் அதிகம் நடக்கின்றன. 

இந்த பிரச்சினை குறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது, இரவில் ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதுபோன்ற வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், வாகனங்களின் பதிவு எண்களை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு சாலைகளில் யூ டேர்ன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் குறைபாடு கண்டறியப்படும் பகுதிகளில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தேவைப்படும் இடங்களில் யூ டேர்ன் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி