கோவை சொக்கம்புதூரை சேர்ந்த திவ்யேஷ் (வயது 28) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் நந்து ஆகியோர் தொடர்ந்து மிரட்டி மதுகுடிக்க பணம் பறித்து வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு திவ்யேஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரதாப் மற்றும் நந்து ஆகியோர் திவ்யேஷை தாக்கி கத்தியின் முனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திவ்யேஷ் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் மற்றும் நந்து ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.