கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சிறு தானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி வரும் 18, 19 தேதிகளில் நடைபெற உள்ளது. கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் மக்களால் ஓரளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எனினும், நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. சிறுதானிய வகைகளில் உள்ள சத்துகளையும், அவற்றை உபயோகித்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார் நிலை உணவு தயாரிக்க இப்பயிற்சியில் கற்றுத்தரப்படும். மேலும் விபரம் தேவைப்படுவோர்,அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையம், 94885 18268 என்ற முகவரிகளும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு சிறு தானியங்களின் பயன்களை அறிந்து கொள்ளுமாறு வேளாண் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு இருக்கும் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளது.