மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கோடை வெப்பம் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில் பூண்டி கோவிலில் உணவுப் பொருட்களை சேதப்படுத்திய யானைகளை கட்டுப்படுத்த கும்கி யானைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தற்போது துடியலூர் அருகே பன்னிமடை பொன்னூத்தம்மன் கோவில் செல்லும் வழியில் நேற்று முதல் ஒற்றைக் காட்டு யானை நடமாடத் தொடங்கியுள்ளது. பக்தர் ஒருவர் இதனை வீடியோ பதிவு செய்துள்ள நிலையில், வனத்துறையினர் பொன்னூத்தம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.