கோவை: பங்குச் சந்தை மோசடி.. ரூ.59 லட்சம் இழப்பு

77பார்த்தது
கோவை: பங்குச் சந்தை மோசடி.. ரூ.59 லட்சம் இழப்பு
கோவை தடாகம் சாலை, ஜி.சி.டி. பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் பழனிசாமி (53). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு வந்த ஒரு மொபைல் குறுஞ்செய்தியில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்ட லிங்கைக் கிளிக் செய்ததும், செல்வகுமார் ஆக்ஸிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப் என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். 

அந்தக் குழுவில் இருந்த ஒருவர், செல்வகுமாரிடம் ஆக்ஸிஸ் செக்யூரிட்டி லிமிடெட் என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி கூறினார். அந்தச் செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால், செல்வகுமார் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, பல்வேறு தவணைகளாக ரூ.59 லட்சத்து 93 ஆயிரம் பணத்தை முதலீடு செய்தார். பின்னர், தனது முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற முயற்சித்த போது, அந்தச் செயலி மூலம் பணத்தை எடுக்க முடியவில்லை. 

இதுகுறித்து அந்தக் குழுவில் உள்ளவரிடம் கேட்டபோது, அவர் மேலும் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வகுமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று (டிசம்பர் 27) புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த மோசடிக் கும்பலைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி