கோவை: சம்பளம் வழங்காத தனியார் ஆலை-தொழிலாளர்கள் போராட்டம்

62பார்த்தது
கோவை மாவட்டம் காரமடை அருகே ஜடையாம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் KG DENIM என்ற தனியார் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் நிறுவனம், கடந்த நான்கு மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், இரண்டு ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, சிஐடியு நிர்வாகிகளுடன் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்றுமதி இழப்பு காரணமாக சம்பளம் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் போனஸ் நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் போனஸ் நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி