கோவை: ராஜ கோபுரத்தில் இருந்து பழைய கலசங்கள் அகற்றம்

59பார்த்தது
கோவை: ராஜ கோபுரத்தில் இருந்து பழைய கலசங்கள் அகற்றம்
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அடுத்த மாதம் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை ஒட்டி, 84 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் உள்ள பழைய ஏழு கலசங்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று அகற்றப்பட்டன. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், ராஜ கோபுரத்தில் உள்ள பழைய கலசங்கள் அகற்றப்பட்டு உள்ளது. விரைவில், புதிய கலசங்கள் பொருத்தப்படும், என்றார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து, தற்போது, அடுத்த மாதம், 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி