கோவை: வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற வடமாநில இளைஞர் தற்கொலை

85பார்த்தது
கோவையில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர், சிகிச்சை பலனளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராம் சந்தர் (வயது 35) என்பவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால், அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் திடீரென அங்கிருந்த நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து, தனது கழுத்தை அறுத்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த இடத்தில் வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி