கோவை: தாய், மகள் ஒரே நேரத்தில் எழுதிய 12ம் வகுப்பு தேர்வு!

81பார்த்தது
கோவை ஒரு ஒரே நேரத்தில் தாய், மகள் தேர்வு எழுதி தாய் தோல்வி அடைந்த நிலையில் மகள் தேர்வில் வெற்றி பெற்று உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
லாவண்யா மற்றும் அவரது மகள் அனன்யா ஆகியோர் இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய நிலையில் மகள் வெற்றி பெற்று உள்ளனர். தாய், மகள் ஒரே நேரத்தில் தேர்வெழுதி இருவரில் மகள் மட்டும் தேர்ச்சி பெற்றது அப்பகுதி மக்கள் இடையே பேசு பொருளாக மாறி உள்ளது. தாய்
லாவண்யா தனது தேர்வில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் , 335 மதிப்பெண்கள் பெற்று எக்னாமிக்ஸ் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து உள்ளார். அதேபோல், அவரது மகள் அனன்யா தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 548 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வில் எழுதி மகள் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி