கோவை: இளைஞர்களுக்கு புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி

66பார்த்தது
கோவை: இளைஞர்களுக்கு புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி
கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 வாரங்கள் கொண்ட இந்த பயிற்சி, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் வழங்கப்படும். 

இதில், System Engineering Expertise, Electronics System Design & Manufacturing, Industrial Automation, Robotics மற்றும் Additive Manufacturing போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில், Technology Startups, Electronic Manufacturing Company, Mobility and Automotive Company போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று, மாதம் குறைந்தபட்சம் ரூ. 20,000/- ஊதியம் பெறலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 

2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21-25 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி