கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டடம் எதிரே இருந்த 3 மரங்களின் அடிப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் அமிலத்தை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த 3 மரங்களும் கருகின.
இது குறித்து தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நேற்று காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரித்து வருகின்றனர்.