கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா. ஜ. க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பா. ஜ. க தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பா. ஜ. க மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். நிகழ்வில் சிறப்புரையாற்றிய எச். ராஜா, தி. மு. க அரசு மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல பா. ஜ. க சார்பில் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், பா. ஜ. கவினர் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகளுடன் காலப்பட்டி பகுதிகளில் இருக்கும் பொது மக்களின் வீட்டிற்கு சென்ற அவர், திமுகவின் மும்மொழி கொள்கைக்கு எதிரான மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி கையெழுத்து பெற்றார். அவருடன் பாஜக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.