கோயம்புத்தூர் காளப்பட்டி அசோக் நகரைச் சேர்ந்த பெரியசாமி (62) என்பவர், தனது மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி சாலை இந்திரா நகர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின் கதவை பயணி திடீரென திறந்ததால், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கதவில் மோதியது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி, 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பீளமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ணன் மகன் பரத் (32), மற்றும் பின் கதவை திறந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.