கோவை: வாலிபருக்கு கத்திக்குத்து..3 பேர் மீது வழக்குப்பதிவு

60பார்த்தது
கோவை: வாலிபருக்கு கத்திக்குத்து..3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாபு (வயது 32). திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணை தனது பைக்கில் ஏற்றி பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளார். அதன் பிறகு, அந்த பெண்ணுடன் பாபுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாபு தனது புதிய கடை திறப்பு விழாவிற்கு அந்த பெண்ணை அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அந்த பெண் தவறாக புரிந்துகொண்டு, இதுகுறித்து தனது சகோதரர் கவியரசுவிடம் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கவியரசு, நேற்று முன்தினம் இரவு சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் சென்றுகொண்டிருந்த பாபுவை நிறுத்தி பேசியுள்ளார். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, கவியரசுவுடன் வந்தவர்கள் பாபுவை சரமாரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றுள்ளனர். அப்போது, பாபுவின் காது மற்றும் கைகளில் கத்திக்குத்து விழுந்தது. 

காயமடைந்த பாபுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பாபு சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கவியரசு என்கிற கவி, விமல் குமார், பிரவீன் ஆகிய மூன்று பேர் மீதும் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி