கோவை: ரூ.40 லட்சம் கையாடல் செய்த வழக்கு

60பார்த்தது
கோவை: ரூ.40 லட்சம் கையாடல் செய்த வழக்கு
கோவையில் வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாளப்பட்டதாக கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தர் தனலட்சுமி, முன்னாள் எழுத்தர் பேச்சியண்ணன், உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கடந்த 9.9.2000 அன்று வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று (ஜனவரி 9) வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அருண்குமார், குற்றம் சாட்டப்பட்ட நாராயணசாமிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தனலட்சுமி, பேச்சியண்ணன், மகேந்திரன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்தி