கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் சுமார் 8 3/4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹைரன் (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று உத்தரவு பிறப்பித்தார். அவர் ஏற்கனவே சிறையில் இருப்பதால், அவரிடம் அதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டது.