கோவை: இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

65பார்த்தது
கோவை: இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
கோவை, சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் திருமணமானவர். இவர் நேற்று தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். 

அப்பொழுது அவரது வீட்டில் பின்புறம் குடியிருக்கும் வாலிபர் ஒருவர் அங்கு வந்து ஜன்னல் வழியாக செல்போனில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த இளம் பெண் தான் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அந்த இளம் பெண் தனது கணவரிடம் செல்போனில் கூறினார். மேலும் இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இளம் பெண்ணின் கணவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் செல்போனில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி