மேட்டுப்பாளையம் பாரி கம்பெனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 11. 4511.45 மணியளவில் சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வைல்டு லைஃப் ரேங்க்லர்ஸ் குழுவின் நிர்வாகி கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாகப் பிடித்தார். பின்னர், அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.