கோவை: பல்பொருள் அங்காடியில் திருட்டு - முதியவர் கைது

71பார்த்தது
கோவை: பல்பொருள் அங்காடியில் திருட்டு - முதியவர் கைது
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் ஸ்டோர் என்ற பல்பொருள் அங்காடியில் நேற்று இரவு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. 60 வயதான விமலராஜா என்பவர் பல்வேறு பொருட்களை வாங்கி பில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியே செல்லும்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அவரை பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், விமலராஜா பல்பொருள் அங்காடியில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி உள்ளாடைகளில் மறைத்து கொண்டு செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விமலராஜாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி