கோவை: 700 ஆண்டுகள் பழமையான 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

74பார்த்தது
கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே 700 ஆண்டுகள் பழமையான 5 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோவை தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ், ஒத்தக்கால்மண்டபம் அருகே மீனாட்சிபுரத்தை அடுத்த வடபுதூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தடியில் பழமையான 5 நடுகற்களை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், வடபுதூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5 நடுகற்களும் சுமார் 700 ஆண்டுகள் பழமையானவை. அவற்றில் பண்டக்கல் என்ற பெயரில் ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பழங்காலத்தில் விவசாய பொருட்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றிய வீரனுக்கு வைத்த நடுகல் என்பதால் பண்டக்கல் என்று பெயர் வைத்திருக்கலாம். யானை ஒன்று விவசாய பயிர்களை தின்ன வந்தபோது, காவல்காத்த வீரனுக்கும் யானைக்கும் ஏற்பட்ட மோதலில் வீரன் இறந்துள்ளார். அவரது நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இந்த பண்டக்கல் உள்ளது. இந்த நடுகல் 3 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் கொண்டது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி