போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு 26 ஆண்டு சிறை

55பார்த்தது
போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு 26 ஆண்டு சிறை
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன் பழனிசாமி (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று 30. 09. 2024-ம் தேதியான இன்று கண்ணன் பழனிசாமிக்கு 26 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 15, 000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் திருமதி. கனிமொழி (WPC 1127 ) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி