வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

75பார்த்தது
வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இடிகரை பகுதியை சேர்ந்த நல்ல குமார் (20), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் (20) ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளிகளான நல்ல குமார் மற்றும் சுபாஷ் (20) ஆகியோரின் மீது இன்று (அக்.,4) குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது, அதற்கான ஆணையை சிறையில் இருக்கும் அவர்கள் இரண்டு பேரிடமும் சிறைத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி