தமிழக அரசு அலுவலகங்களில் 'துாய்மை மிஷன்' திட்டம் நேற்று துவங்கியது. இதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள், தளவாடங்கள் அகற்றப்பட்டன. முன்னதாக நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய துாய்மை மிஷன் திட்டம் துவங்கப்படும் என்று, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.