பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்புரில் பாகிஸ்தான் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ (ANI) தகவல் அளித்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஃபிரோஸ்புர் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.