தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் காபி தூள் தயாரிக்கும் தொழில் தொடங்க இருப்பதாக தனது அக்காவிடம் கூறியுள்ளார். மேலும், அதனை கிறிஸ் கெயில் விளம்பரம் செய்யவுள்ளதாகவும் கூறிய அவர் பணம் கேட்டுள்ளார். இதனால், அவர் தனது பணம் ரூ.2.8 கோடி உள்பட சுற்றுவட்டாரத்தில் இருந்து மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஏமாந்ததை உணர்ந்த அக்கா, தனது சகோதரன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.