மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது சளி தான். அதற்கு அருமையான தீர்வு ஒன்று உள்ளது. ஒரு சிறிய கரண்டியில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் சிறிதளவு கற்பூரத்தை உடைத்து போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். கற்பூரம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆறியதும் எண்ணெயை நெஞ்சு, முதுகு, நெற்றி, தொண்டை பகுதியில் தேய்க்க வேண்டும். பாதங்களிலும் தேய்க்கலாம். ஒரு வாரம் இப்படி செய்தால் நெஞ்சு சளி காணாமல் போய்விடும்.