திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக X தளத்தில் தவறான தகவலை பதிவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுநர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சமீபகாலமாக குழந்தை கடத்தல் போன்ற வதந்திகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.