சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கி பாராட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கப்பட்டது.