சென்னை: தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவை. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துணிச்சலை போற்றும் வகையில் முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி நடைபெறவுள்ளது. ஒற்றுமை பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றார்.