ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், கரூர், புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆக. 5இல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.