சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. அவரை சிறைத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவர் மாலை டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அதிகாரிகள் அவரை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.