மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய நடைமுறையைச் செயல்படுத்த தேர்வுத் துறை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.