தமிழ்நாட்டில் பாஜக அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம் என முன்னாள் மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், அத்தொகுதிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்ற அவர், பாஜக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். திமுக அரசின் அதிகார பலம், பண பலத்தை பாஜக வென்றுள்ளதாகவும் அவர் சூளுரைத்தார்.