சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது வழக்கு

69பார்த்தது
சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது வழக்கு
சென்னை: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கொளத்துாரைச் சேர்ந்த பெண் ஒருவரின் 15 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து, செம்பியம் காவல் நிலையம் வந்தனர். இதையடுத்து மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்த போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது பெற்றோருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி