பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அவரை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த விவகாரத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.