சென்னை: வளர்ப்பு நாய்களுக்கு வாய்முடி கட்டாயம் அணிவிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிடுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் உள்ள வீடுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்ப்போர், அவற்றை வெளியில் அழைத்து வரும்போது, வாய்முடி கட்டாயம் அணிவித்து அழைத்து வரவேண்டும். அப்படி தவறும் உரிமையாளர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.