ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாட்ராக். இவரது தந்தை சாமுவேல், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, ஷாட்ராக் உடனிருந்து கவனித்து வருகிறார். இரவு, ஷாட்ராக் மருத்துவமனையின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது ஆப்பிள் ஐபோனை மர்ம நபர் திருடி ஓடினார். ஷாட்ராக் அவரை விரட்டிச் சென்று பிடித்து, மருத்துவமனை வளாக போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆல்பர்ட் விஜய் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததும், மொபைல் போன் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.