பாலியல் விவகாரத்தில் திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த மாணவிக்கு ஆதரவாக, கட்சி சார்பாக யாரும் எதையும் பேசக்கூடாது. தற்போது கூட பாஜக சார்பில் நாங்கள் இதை பேசவில்லை. பெண் என்ற முறையில்தான் பேசுகிறோம்.
மாணவிக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். திமுக ஆளும் தமிழகத்தில் பல பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, அதை மறைப்பதற்காக பக்கத்து மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளைக் கணக்கிடுகிறார்கள். தவறை தட்டிக்கேட்கும் தைரியம் திமுக அரசுக்கு இல்லை. திமுக மகளிர் அணி எங்கே போனது? கனிமொழி எங்கே சென்றார்? திமுக சார்பாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? என அவர் கூறினார்.