சென்னை: இபிஎஸ்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை.. உயர்நீதி​மன்​றம்

56பார்த்தது
சென்னை: இபிஎஸ்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை.. உயர்நீதி​மன்​றம்
முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது மத்​திய சென்னை தொகுதி திமுக எம்​பி​யான தயாநி​தி​மாறன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியை முறை​யாக செல​விட​வில்லை என அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி சென்​னை​யில் நடை​பெற்ற தேர்​தல் பிர​ச்சார பொதுக்​ கூட்​டத்​தில் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

இதற்கு மறுப்பு தெரி​வித்த தயாநிதி மாறன், முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி்க்கு எதி​ராக அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு சென்னை எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், வழக்கு விசா​ரணைக்கு தடை விதிக்​கக் கோரி​யும் உயர் நீதி​மன்​றத்​தில் பழனி​சாமி மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது நீதிப​தி, இந்த வழக்​கில் தயாநிதி மாறன் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை வரும் ஏப்​. 4-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார். அது​வரை பழனி​சாமி்க்கு எதி​ரான வழக்​கு வி​சா​ரணைக்​கு இடைக்​காலத்​ தடை வி​தித்​துள்​ளார்​.

தொடர்புடைய செய்தி